Thursday, April 15, 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா


படித்ததில் ரசித்த மின்னஞ்சல் 
 நீதிமன்றத்தில் நித்தியானந்தா
நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால்இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்
.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. 
 
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவாஇல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
 ஏன்..??காற்றுவரவேண்டுமென்பதற்காகவாஇல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்
.. ஏன்???எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை
??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களேஎன் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனைமிதிகள் எத்தனைஉதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை
என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்
ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... 


என் பெயரோ நித்தியானந்தா
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்
ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்கஞ்சா பிசினஸ்கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்
,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....

கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் 

 
 
  
ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

 
என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும்என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். 

 
செய்தார்களாதப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவைஎன்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமாஎன்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

 
நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமாகேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா

 
எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமாஇல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

 
இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்என்னை போன்ற நித்தியானந்தாக்கள்ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்...
__._,_.___

2 comments:

  1. தோழர் அனாசின் மின்னஞ்சலை தங்களது வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறிர்கள் பாராட்டுக்கள் தோழர் !!

    ReplyDelete