தாத்தா செய்த வேலையை
அப்பா செய்யவில்லை ...
அப்பா செய்யும் வேலையை
மகன் செய்ய போவதாக
உறுதி இல்லை ...
மகன் செய்யபோகும் வேலையை
அவன் மகன் செய்வான் என்று
எந்த உத்திரவாதம் இல்லை ...
ஆனால்
பாட்டி செய்த வேலையையே
அம்மாவும் ....
அம்மா வேலையையே
மகளும்...
மகள் வேலையையே
அவளின் மகளும் செய்கின்றனர் ...
ஏன் என அந்த
அடுபடிக்கும்
தெரியவில்லை ...
என்பதே பாகுபாடு .