Sunday, February 20, 2011

அமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது

காஞ்சிபுரம், மதுராந்தகம் வட்டத்தில் வயல் வெளிகளைக் கடந்து ஊருக்கு செல்லும்போது உயர்ந்து நிற்கிறது 190 வருட பழமை மிக்க தூயஆரோக்கிய அன்னை தேவாலயம். பழமையும், கம்பீரமும் உடைய இத் தேவாலயத்தின் கல்லறையில் இதுவரை தலித் மக்களின் உடல் புதைக்கப்படவே இல்லை . தலித் மக்கள் பல வருடங்கள், தொடர் போராட்டங்கள், எண்னெற்ற முயற்சி கள் என்று தொடர்ந்தபோதும் கல்லறை உரிமை என் பதை சாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து மறுத்துள்ளனர். இத்தோடு வழிபாட்டில் சம உரிமைகோரி இத்தேவால யத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 12 வருடம் இக் கோவில் பூட்டப்பட்டிருந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்று தான் திறக்கப்பட்டுள்ளது.

தேவாலயம் பூட்டப்பட்டதற்கான காரணம் ஒன்று தான். ஆலயத்தின் மையப்பகுதியில் தலித் மக்கள் அமரக் கூடாது என்பதுதான். இந்த உரிமை மீட்கப்பட்டு திறக்கப் பட்ட நிலையில் கல்லறை உரிமை தலித் மக்களுக்கு மறுக் கப்பட்டே வந்துள்ளது.

2011 ஜனவரி 22 அன்று தலித் இளைஞன் வேளாங் கண்ணி மரணம் அடைகிறார். அவரை தேவாலயக் கல்ல றையில் அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு ஆதிக்க சாதியின ரால் தெரிவிக்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினர் லதா உடனிருக்க அடக்கம் செய்யப் படுகிறது. அடக்கத்திற்காக குழி வெட்டிய இராஜேந்திரன் இறுதி நிகழ்ச்சி முடிந்தபின் மாலை தோட்டத்திற்கு செல் கிறார் இரவாகிறது.

அடுத்த நாள் விடிகிறது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்பவில்லை. காவல்துறையினரி டம் ஜனவரி 23 அன்று புகார் தெரிவிக்கப்படுகிறது. ஜன வரி 24 அன்று மாலை இராஜேந்திரன் ஏரியில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதக்கிறார்.

தச்சூர் இராஜேந்திரனை கொலை செய்த கொலை யாளிகளை கைது செய்யக்கோரியும், அவரது உடலை பொதுக் கல்லறையில் புதைக்கும் உரிமை கோரியும், உரிய இழப்பீடு கோரியும் உடல் வாங்க மறுக்கப்படுகிறது. ஜன வரி 25 காலை தச்சூர் தலித் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒருநாள் அல்ல. மதுராந்தகத்தில் கோரிக்கைக்காக விடுதலை சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுபட்ட எதிர்ப்பாக ஆர்ப்பாட்டம் செய்கிறது.

இந்நிலையில் மூவரை காவல்துறையினர் கைது செய் கின்றனர். எனவே, தச்சூர் இராஜேந்திரன் உடல் பெறப் பட்டு கிராமம் நோக்கி விரைகிறது. எஸ்.பி, எ.எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் தங்கள் கைகளில் லத்திக்கள், கவ சங்கள் அணிந்து போருக்கு போகும் உணர்வோடு, ரப்பர் குண்டு வைத்து போராட்டக்காரர்களை கலைக்கும் அதி நவீன ஆயுதங்களோடு முழு பலத்தோடு மனுநீதியை தேவா லயத்தில் பாதுகாப்பதற்காக அணிவகுத்து நிற்கின்றனர்.

அரசியல் சட்டமும், உறுதிமொழியும் மறந்து போன வர்களுக்கு சட்ட அறியாமையை, சட்டம் மன்னிக்கா விட்டாலும் மீண்டும் நாம் எடுத்துரைத்தோம். திரண்டு நின்ற உரிமைக்கான கூட்டத்தின் ஆவேசக் குரல் ஆட்சியா ளர்களின் காதுகளை பிளந்தது, ஆட்சியாளர்களும், அதி கார வர்க்கமும் மீண்டும் மீண்டும் கூறினார்கள். ஆதிக்க சாதியினர் கொடுத்த மனு அமைதியை பாதுகாக்க என.

தச்சூர் இராஜேந்திரன் கல்லறை உரிமைக்காக உயிர் தந்தவன். அவனுக்கு கல்லறை மறுப்பா? அனுமதியோம் என நம் குரல் விண்ணை பிளந்தது. அமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாதென்று.

நிறைவாக நீதியே வென்றது. சம உரிமையை எட்டியது தேவாலயக் கல்லறை..





ஃபாக்ஸ்கான் போராட்டம் – தமிழக அரசு யார் பக்கம்?


மக்களை இணைக்கும் என்ற அடைமொழியுடன் உலகம் முழுவதும் தன் செல்போன் விற்பனை மூலம் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ள நிறுவனம் நோக்கியா. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் என்பது மாறி அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா என்ற நிலை உருவாகியுள்ளது. அந்நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயார்செய்வது தான் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி. தைவான் நாட்டின் கம்பெனியான ஃபாக்ஸ்கான் 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பத்தூரில் தன்னுடைய உற்பத்தியை துவக்கியது. இந்நிறுவனத்தில் 1800 நிரந்தர ஊழியர்களும், 6000 தற்காலிக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதி இளம் ஆண்களும், பெண்களும் பணியாற்றுகின்றனர்..

இதில் பெரும் எண்ணிக்கையில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ. 150 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களுக்கு,. இந்திய நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் தரப்படவேண்டிய நிரந்தர பணி நியமன ஆணை, ஈ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வை துவக்கினர். 2010 ஜூலை மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 200 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.. இது தொழிலாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷவாயு கசிவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரியபோது சரியான பதில் இல்லை.

தங்களுக்கு நியாயம் கேட்கும் என உருவாக்கப்பட்ட தொ.மு.ச.வோ நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதன் காரணமாக நிர்கதிக்கு ஆளான தொழிலாளர் இந்திய தொழிற்சங்க மையத்தை (சிஐடியு) அனுகியுள்ளனர்.. பின் தங்களுக்கான சங்கத்தை உருவாக்கி ஆகஸ்ட் 22 அன்று செங்கொடியை தங்கள் நிறுவனத்தின் முன்பாக ஏற்றினர். ஆகஸ்ட் 24 அன்று ஃபாக்ஸ்கான் நிர்வாகம், தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் தங்கள் நிறுவனத்தில் வாக்கெடுப்பு மூலம் எந்த சங்கத்திற்கு பெரும்பான்மை என்பதை தீர்மானித்து உதவிட கேட்டுக்கொண்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த கடிதத்தின் மீது தொழிலாளர் நலத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிஐடியு இத்தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் சம்பள கோரிக்கைகாக தாவா ஒன்றை தொழிலாளர் நலத்துறையிடம் எழுப்பியது. தாவா நிலுவையில் உள்ள நிலையில் தொ.மு.ச ஒப்பந்தம் போட முயற்சி செய்தது.. இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் தங்களின் கடைசி ஆயுதமான வேலை நிறுத்தத்தை செப். 23 முதல் துவங்கினர். வேலை நிறுத்தம் அமைதியாக நடந்துவரக்கூடிய நிலையில் அக். 9 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் உட்பட 319 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.. ஜாமீனில் வந்த அன்றே மீண்டும் பொய் வழக்கு போட்டு அக் 13ந்தேதி அ.சவுந்தரராசன், இ.முத்துகுமார் உட்பட 12 தோழர்களை கைவிலங்கிட்டு உத்தரமேரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இது மனித உரிமையையும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நீதிக்கும் முரணானது என்று சவுந்தரராசன் காவல்துறையிடம் எடுத்துரைத்த பின்னும் காவல்துறையின் வக்கிரம் அடங்கவில்லை.

இத்தோடு மட்டுமல்ல, ஸ்ரீபெரும்பத்தூரில் சிஐடியு அலுவலகம் செயல்பட இடம் வாடகைக்கு விட முன்வருபவர்களை திமுக குண்டர்களும், காவல்துறையும் மிரட்டியது. மேலும், ஜாமீன் கேட்டு மனுசெய்யும் போது, செஷன்ஸ் நீதிபதி தற்காலிக விடுப்பு, பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் விடுப்பு என காலதாமதம் செய்து ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டினர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் நாங்கள் நினைத்தால் நீங்கள் நடக்கமுடியாது, இருக்கமுடியாது, போராட முடியாது கொக்கரித்துள்ளார்.

இப்போராட்டம் நடைபெறும் காலத்தில் தான் தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. அந்த ஒப்பந்தங்களில் என்ன தான் இருக்கிறது, 1) தனி சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்படுவது, 2) குறைந்த விலையில் நிலம் 99 வருடத்திற்கு, 3) தண்ணீர் வசதி, 4) குறைந்த விலையில் மின்சாரம், 5) 10 ஆண்டுகள் வரிச்சலுகை 6) தொழிற்சாலை போக மீதி இடத்தை உள்வாடகைக்கு விட அனுமதி என வெளியில் தெரியாத எத்தனையோ சலுகைகள் உள்ளன. அரசிற்குள் அரசாக உள்ள இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்திய சட்டங்கள், சட்டங்களின் அமலாக்கம் கேள்விக்குறியாக உள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூரில் நோக்கியா நிறுவனம் தன் பெயரில் 221 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்துள்ளது. ஒரு ஏக்கர் 4.5 லட்சம் ரூபாய்க்கு, 99 வருட குத்தகைக்கு இந்நிறுவனம் தமிழக அரசிடம் பெற்றுள்ளது. இம்மண்டலத்தில் 7 நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஃபாக்ஸ்கான். இக்குழுமத்தின் வரிச்சலுகை துவக்கப்பட்டது முதல் தற்சமயம் வரை 645 கோடி ரூபாய் தமிழக அரசு வாட் வரி விதிப்பின் மூலம் வரிச்சலுகை தந்துள்ளது.

இப்படியாக அரசின் சலுகைகளை அள்ளிச் செல்லும் நிறுவனத்தில் தொழிலாளர் நிலை என்ன? உலகமயம் காட்டும் பாதையான. தொழிலாளர் உழைப்பை அடிப்படையாக கொண்டு கொள்ளை இலாபத்தை கொண்டு செல்கிறது. ஆனால், உழைப்பிற்குகேற்ற ஊதியம், பணி நிரந்தரம், ஈ.எஸ்.ஐ, பி.எப், ஓய்வு ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சுரண்டி இலாபம் தனக்குமட்டுமே என்ற நோக்கத்தோடு உள்ள கோட்பாடுதான் உலகமயம்.

இளைஞர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு, அவனை தூரவீசும் கலாச்சாரமே தனியார்மயம். இதுவே நோக்கியா, ஃபாக்ஸ்கான, ஹ¨ண்டாய், ஃபோர்டு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் தமிழக அரசு முதலாளிகள் பக்கமே என்று மீண்டும் வெளிக்காட்டியுள்ளது ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்